நாட்டின் அடிப்படை அரசியலமைப்பு துண்டாடப்படுகிறது - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

நாட்டின் அடிப்படை அரசியலமைப்பு துண்டாடப்படுகிறது -  மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் நிறுத்தியதைப் போல் தற்போது பாஜகவும் நிறுத்த நினைக்கிறது என ஜம்மு காஷ்மிரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மிரின் முன்னாள் முதலமைச்சரும், அரசியல் தலைவருமான மெகபூபா முப்தி இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவது என முதலமைச்சர்களுக்கு இடையே போட்டி நிலவுவதால்தான் கோயில் மற்றும் மசூதி பற்றிய பிரச்னைகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், இஸ்லாமியர்களை எதிர்வினை ஆற்ற துண்டுவதன்மூலம் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது என்றும் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் நிறுத்தியதைப் போல் தற்போது பாஜகவும் நிறுத்த நினைக்கிறது என்றும் விமர்சித்தார்.