விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்....

அரியானாவில், விவசாயிகள் போராட்டம் நடத்திய பகுதியில், கை துண்டிக்கப்பட்டு நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்....

விவசாயிகள் போராட்டம் நடத்திய சிங்லி பகுதியில், இந்த சடலமானது தொங்க விடப்பட்டிருந்தது. அதில் அடையாளம் தெரியாத நபரின் இடது கை துண்டிக்கப்பட்டு,  அருகிலிருந்த பேரிகாட் தடுப்பில் உடல் தொங்க விடப்பட்டிருந்தது. அவரது தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.  அந்த நபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை.  

இருப்பினும், இந்த படுகொலையை நிகாங்க்ஸ் என்ற சீக்கிய போராளி அமைப்பு அரங்கேற்றியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையான நபர் சீக்கிய புனித நூலை அவமதித்ததால் கொடூர படுகொலைக்கு ஆளாகியிருக்க கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் கொலையாளியை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை எச்சரிக்க இதுபோன்ற சம்பவம் நடத்தப்பட்டதா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.