ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி : குஜராத்தில் பயங்கரம்

குஜராத் மாநிலம் தாராப்பூர் அருகே லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி : குஜராத்தில் பயங்கரம்

குஜராத் மாநிலம் தாராப்பூர் அருகே லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சூரத்தை சேர்ந்த குடும்பத்தினர் பவன்நகருக்கு அதிகாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திரானாஜ் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. எதிர்பாராத விதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை, 2 பெண்கள், 7 ஆண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.