ஒடிசாவில் களைக்கட்டிய தேவ தீபாவளி கொண்டாட்டம்..!

மண் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி வழிபாடு..!

ஒடிசாவில் களைக்கட்டிய தேவ தீபாவளி கொண்டாட்டம்..!

ஒடிசா மாநிலம் புரியில் தேவ தீபாவளி கொண்டாட்டத்தின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக, அங்குள்ள கோயிலில் மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. தமிழகத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருவிழா, வட மாநிலங்களில் தேவ தீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலம் புரியில் தேவ தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனையொட்டி அங்குள்ள ஜெகன்நாதர் கோயிலில் மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்யப்பட்டது. கோயில் வளாகம், அங்குள்ள சிலைகள் உள்ளிட்டவை மண் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த தேவ தீபாவளி கொண்டாட்டம், 3 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.