கிராம பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைக்க வேண்டும்: பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டவருக்கு நூதன தண்டனை...

பாலியல் வழக்கில் கைதான நபருக்கு 6 மாதம் கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார்.  

கிராம பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைக்க வேண்டும்: பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டவருக்கு நூதன தண்டனை...

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்த 20வயதான லாலன் குமார்,  சலவை தொழில் செய்துவரும் இவர் மீது, அதே கிராமத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் லாலன் குமாரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். ஐந்து மாதம் சிறைவாசம் அனுபவித்த லாலன் குமார், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

பெண்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்த, தனது தொழில் ரீதியாக பெண்களுக்கு சமூக சேவை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்ற ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார், அடுத்த 6 மாத காலத்திற்கு மஜோர் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார்.

நீதிமன்றத்தின் இந்த நிபந்தனையால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக, அக்கிராமத் தலைவர் நசீமா கட்டூன் தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், இது பெண்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும் என்றும் கூறினார்.