மேலும் உயர்ந்தது ஜொமாட்டோ நிறுவன பங்குகள்... 77% அளவுக்கு உயர்ந்தது...

மும்பை பங்கு சந்தையில் சோமாடோ நிறுவன பங்குகளின் மதிப்பு 77 சதவீதம் அளவுக்கு உயர்வை கண்டுள்ளது பங்கு முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் உயர்ந்தது ஜொமாட்டோ நிறுவன பங்குகள்... 77% அளவுக்கு உயர்ந்தது...
இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஐ.பி.ஓ. எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலில் களமிறங்கியது சோமாடோ. ஒரு பங்கின் விலை 74  முதல் 76 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
 
ஆனால், எதிர்பாராத வகையில் சொமேட்டோ பொதுப் பங்குகள், வெளியீட்டைவிட 38. 25 மடங்குகள் வரை ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த நிலையில் சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப் பங்குகள், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று முதல் முறையாக பட்டியலிடப்பட்டது.
 
பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே  சோமாடோ நிறுவன பங்குகளின் மதிப்பு 77 சதவீதம் அதிகரித்துள்ளது. 76 ரூபாய் அரம்ப விலையாக இருந்த சோமாடோ நிறுவன பங்குகளின் மதிப்பு 134 ரூபாயாக உயர்ந்துள்ளது.