தனியார் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து: 2 பேர் பலி

குஜராத் மாநிலம் சூரத்தில் தனியார் தொழிற்சாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியான நிலையில் கட்டிடத்திற்குள் சிக்கி தவித்த 125 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தனியார் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து: 2 பேர் பலி

குஜராத் மாநிலம் சூரத்தில் தனியார் தொழிற்சாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியான நிலையில் கட்டிடத்திற்குள் சிக்கி தவித்த 125 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குஜராத மாநிலம் சூரத்தில் கடோதரா என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று காலை எதிர்பாராத விதமாக தீ பற்றியுள்ளது. பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ எளிதில் பற்றக்கூடிய பொருள்கள் மிகுதியாக இருந்ததால் தீ மளமளவென தொழிற்சாலையின் மற்ற பகுதிகளுக்கு பரவி, கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்குள் கொழுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கி இருவர் பலியாகினர்.

மேலும் கட்டிடத்திற்குள் சிக்கிய 125க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டிடத்தின் மேல் தளத்துக்கு கொண்டுவரப்பட்டு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.