சிறு, குறு தொழில்கள் அழிந்து விடும் எனக் கூறியுள்ளார் ப.சிதம்பரம் ..ஏன் தெரியுமா?

சிறு, குறு தொழில்கள் அழிந்து விடும் எனக் கூறியுள்ளார் ப.சிதம்பரம் ..ஏன் தெரியுமா?

ஜிஎஸ்டி, சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழிலின் அழிவிற்கு வழி வகுத்திருப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், இப்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் திட்டமிடப்பட்ட ஜிஎஸ்டி அல்ல என்பதை காங்கிரஸ் சார்பில் தெளிவு படுத்த விரும்புவதாக கூறினார். தற்போது இருக்கும் ஜிஎஸ்டி நடைமுறையில் குறைபாடுள்ளது என்றும், நிலையற்றது எனவும் சாடிய ப.சிதம்பரம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நம்பிக்கையை இது உடைப்பதாக அவர் கூறினார்.