புதுவையில் 1 லட்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

புதுவையில் 1 லட்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலில் வடமாநிலங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு பின் தென்மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, புதுச்சேரியிலும் அதிகரித்து வருகிறது. 

புதுச்சேரியில் தொடர்ந்து உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது  1 லட்சத்தை கடந்தது மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1137 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதோடு 20 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 833  நபர்களுக்கும்,  காரைக்காலில் 234 நபர்களுக்கும்,  மாஹேவில் 38 நபர்களுக்கும் , ஏனாமில் 32 நபர்கள்  என மொத்தம் 1137 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதுச்சேரியில் 15 நபர்களும், காரைக்காலில் 2 நபர்களும், ஏனாமில் 3 நபர்கள் என 20 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1455 ஆக உயர்ந்துள்ளது. 14473 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84749 நபர்கள் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு 1,00,677 ஆக உள்ளது. என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது.