சபாநாயகரை தகாத வார்த்தைகளில் பேசிய 12 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு ஆண்டுக்கு இடைநீக்கம்...

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சபாநாயகரை தகாத வார்த்தைகளில் பேசிய 12 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சபாநாயகரை தகாத வார்த்தைகளில் பேசிய 12 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு ஆண்டுக்கு இடைநீக்கம்...

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் எனக் கோரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் 12 பேர், அவரை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கடும் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, அமளியில் ஈடுபட்டதாக கூறப்படும் 12 உறுப்பினர்களும் ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் பாஸ்கர் ஜாதவ் அறிவித்துள்ளார்.