கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அனைத்து டாக்டர்கள், நர்சுகளுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்:  அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,இந்த ஆண்டு, டாக்டர்கள், நர்சுகள், பாராமெடிக்கல் துறையினருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இது தான், உயிரிழந்த டாக்டர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றார், தங்களின் உயிர் மற்றும் குடும்பத்தினரை பற்றி கவலைப்படாமல் பணியாற்றுபவர்களை கவுரவப்படுத்துவது போல் அமையும். ஒட்டுமொத்த நாடும், இதனால்  மகிழ்ச்சி அடையும் என அவர் பதிவிட்டு உள்ளார்.