மேற்கு வங்க பாஜக கூடாரத்தை காலி செய்யும் மம்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையும் பாஜகவினர்

மேற்குவங்கம் மாநில பாஜகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க பாஜக கூடாரத்தை காலி செய்யும் மம்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையும் பாஜகவினர்

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. இதையடுத்து, அக்கட்சியின் பல்வேறு நிர்வாகிகளிலும், பிரபலங்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் அதிபுர்தூர் மாவட்ட பாஜக தலைவர் கங்கா பிரசாத் ஷர்மா இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜகவில் நீண்ட காலம் உள்ள நிர்வாகிகளுக்கு மதிப்பு இல்லை என்றும், அதுவே தேர்தலில் பாஜக தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.