புதுச்சேரி சட்டபேரவையில் பாஜகவின் பலம் 12ஆக உயர்வு...

புதுச்சேரி சட்டபேரவையில் பாஜகவின் பலம் 12ஆக உயர்வு...

புதுச்சேரியில் மேலும் ஒரு சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் பாஜகவிற்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ,இதில்  என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6 என மொத்தம் 16 இடங்களில் அந்த கூட்டணி வெற்றிபெற்று  ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 

புதுச்சேரி  சட்டப்பேரவையில் பாஜக 6 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், பாஜகவை சேர்ந்த 3 பேர்  நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர். இதன் மூலம்  பாஜகவின் பலம் 9 ஆக இருந்த நிலையில்   2 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவளித்த நிலையில், தற்போது திருபுவனை சட்டப்பேரவை உறுப்பினர் அங்காளன் ஆதரவளித்துள்ளார். இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது. 

எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு விழா முடிந்த பிறகு  பா.ஜ.க மற்றும்  ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுப்பட்டனர் . அப்போது  அமைச்சரவையில் யார் யார் பங்கேற்பது மற்றும் துணை முதலமைச்சர் பதவி கேட்பது   உள்ளிட்டவை குறித்து தீவிர ஆலோசனை  மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.