சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் - ஜோ பைடன்

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் - ஜோ பைடன்

கொரோனா தோற்றம் குறித்து வெளிப்படையான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

தற்போது உலக நாடுகளை  திக்கு முக்காட வைத்து வரும் கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் இருந்து தான் வெளியானது என்பதற்கான சில ஆதாரங்களை அமெரிக்காவின் தி வால் ஸ்டிரீட் ஜேர்னல் என்ற பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து கொரோனா தோற்றம் குறித்த விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான உலக நாடுகளின் ஆதரவு குரல்கள் பெருகி வருகின்றன.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோபைடன், கொரோனா தோற்றம் குறித்து முழுமையான, வெளிப்படையான மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விசாரணைக்கு சீனா ஒத்துழைப்பது குறித்து ஒருமித்த எண்ணம் கொண்ட உலக நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்தார்.