உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மீண்டும் மனு.....

தன் மீதான பாலியல் வழக்கை ஆந்திர மாநிலத்திற்கு மாற்ற கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கம் செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில்  ராஜேஷ் தாஸ் மீண்டும் மனு.....

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு, விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரித்து வரக்கூடிய சூழலில் அந்த விசாரணைக்கு தடை கோரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில் தன் மீதான பாலியல் வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடக்க வேண்டும் என்பதால் இவ்வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்றம் செய்யக் கோரியும்; சம்மந்தப்பட்ட அதிகார வரம்பில் இல்லாத விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் சூழலில் அதற்கு தடை பிறப்பிக்க வேண்டும் என ராஜேஷ் தாஸ் தரப்பு கேட்டு கொண்டுள்ளது.