கேராளாவில் மேலும் 8 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி

கேரளாவில் நிபா வைரஸுக்கு சிறுவன் பலியாகியுள்ள நிலையில், அங்கு மேலும் 8 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

கேராளாவில் மேலும் 8 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி

கேரளாவில் ஏற்கெனவே கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 

இதையடுத்து சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கேரளாவில் மேலும் 8 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது ரத்த மாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்து எட்டு பேரின் சோதனை முடிவுகள் விரைவில் கிடைக்கும் என்றும், அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்   கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.