உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக நாளை புஷ்கர் சிங் பதவியேற்பு...

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக  நாளை புஷ்கர் சிங்  பதவியேற்பு...

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்று வருகிறது. முதல்வராக பதவி வகித்த திரிவேந்திர சிங் ராவத்தின்  தலைமையிலான ஆட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது.இந்த அதிருப்தி பா.ஜ.கவில் உட்கட்சி பூசலாகவும் வெடித்தது. 

முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங் களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்க வேண்டும். தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படுவது இல்லை என்பது விதியாகும்.

எனவே, தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதன் பேரில், நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள டேராடூன் வந்த நரேந்திர சிங் தோமர், இதனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக பாஜக தலைமை அறிவித்தது.இதனையடுத்து, இந்தக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டதன்படி புஷ்கர் சிங் சட்டமன்றக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களில் உத்தரகண்ட் மாநிலத்தில் 3வது முதல்வர் பதவியேற்க உள்ளார்.இந்த நிலையில் புஷ்கர் சிங் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.