நாடு முழுவதும் 20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்...

நாடு முழுவதும் 20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்...

நாடு முழுவதும் தற்போது வரை 20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் - கடந்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 97 லட்சத்து 79 ஆயிரத்து 304 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 67 லட்சத்து 18 ஆயிரத்து 723 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது 

முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 50 லட்சத்து 79 ஆயிரத்து 964 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 83 லட்சத்து 55 ஆயிரத்து 982 பேருக்கு 2-ஆம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

18 முதல் 44 வயது பிரிவினரில் 1 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரத்து 759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் . 45 முதல் 60 வயது பிரிவினரில் 6 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 484 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.99 லட்சத்து 15 ஆயிரத்து 278 பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 69 லட்சத்து 15 ஆயிரத்து 863 பேர் முதல் டோசும், 1 கோடியே 83 லட்சத்து 13 ஆயிரத்து 642 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக் கொண்டுள்ளனர்.நேற்று ஒரேநாளில் 18 முதல் 44 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 42 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது