மதுராவில் 2வது மாடியிலிருந்து இளம்பெண்ணை தூக்கி வீசிய மூன்று கொடூரர்கள் தப்பியோட்டம்...

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இளம்பெண்ணை மூன்று இளைஞர்கள் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராவில்  2வது மாடியிலிருந்து இளம்பெண்ணை தூக்கி வீசிய மூன்று கொடூரர்கள் தப்பியோட்டம்...

2வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்ணுக்கு முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுய நினைவை இழந்தார். இதையடுத்து இளைஞர்கள் மூன்று பேரும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அருகிலிந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  மூன்று இளைஞர்களும் அப்பெண்ணின் வீட்டிற்கு அருகே வசித்து வந்ததும், ஓராண்டாக அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தப்பிச் சென்ற இளைஞர்கள் 3 பேரில், இருவரைக் கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.