நெதர்லாந்து ஜோடிகளை வீழ்த்திய இந்திய தம்பதியினர்... உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா அசத்தல்...
உலக கோப்பை வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஒரு புதுயுக கால் பந்தாட்ட அகாடமியான FC Madras (எஃப்சி மெட்ராஸ்), சென்னை அருகே மகாபலிபுரத்தில் (Mahabalipuram) உலகத்தரத்திலான கால் பந்தாட்ட அகாடமி ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறது.
அகில இந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு (AIFF) மற்றும் ஆசிய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றால் குறித்துரைக்கப்பட்டவாறு FIFA தரநிலைகளுக்கு இணக்கமானதாக “ஹோம் ஆஃப் எஃப்சி மெட்ராஸ்” என்ற இவ்வளாகம், உருவாக்கப்பட்டிருக்கிறது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வளாகத்தில் இரவு நேரத்திலும் ஜொலிக்கும் ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் விளையாடுவதற்கான கால்பந்தாட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம், உடல் வலுவை மேம்படுத்தி உடற்தகுதியைப் பேணுவதற்கான மையம், மருத்துவ சிகிச்சை மற்றும் காயங்களிலிருந்து மீண்டு குணமடைவதற்கான சிகிச்சை மையங்கள், சர்வதேச தரத்தில் ஒரு உள்ளரங்க ஃபுட்ஸ்சால் மைதானம், 6 லேன்கள் கொண்ட நீச்சல் குளம், நவீன சமையலறை மற்றும் உணவுக்கூடங்களுடன் கூடிய தங்கும் விடுதி, NIOS (திறந்த நிலை பள்ளி கல்விக்கான தேசிய நிறுவனம்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மாற்றுவழி கற்றல் மையம் ஆகியவை இவ்வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு சிறப்பு வசதிகளுள் சிலவாகும்.
திறன் உருவாக்கல் என்ற குறிக்கோளின் மீது நீண்டகால பொறுப்புறுதியை இந்த அகாடமி கொண்டிருக்கிறது. கால்பந்தாட்டம், கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கல்வி முறையியலுடன் உலகத் தரத்திலான கால் பந்தாட்ட உட்கட்டமைப்பு வசதியையும், தனித்துவமான கலவையை வழங்குவது இதன் நோக்கமாகும். மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான இந்த உள்ளுறை வளாகத்தில் 130 இளம் வீரர்கள் வரை படிக்கலாம். அவர்களது கால் பந்தாட்ட பயிற்சி, தங்கியிருப்பு மற்றும் கற்றல் தேவைகள் அனைத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டதாக இது இருக்கும்.
திறனும், ஆர்வமும் மிக்க கால் பந்தாட்ட வீரர்களை தேடி கண்டறிவதற்கு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டத்தின் மூலம் திறமையான இளம் கால் பந்தாட்ட வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் (கல்வி உதவித்தொகை) – ஐ எஃப்சி மெட்ராஸ் வழங்குகிறது. சர்வதேச அளவில் இந்திய நாட்டின் பிரதிநிதிகளாக சிறப்பாக விளையாடி தேசத்திற்கு பெருமை சேர்க்கின்ற கால் பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதும் மற்றும் இந்தியாவில் கால் பந்தாட்டத்திற்கு மிக சிறப்பான பயிற்சி வழங்கும் மையமாகவும் திகழ்வதே இந்த அகாடமியின் நோக்கமாகும்.
இதையும் படிக்க: தேமுதிகவின் விஸ்வரூப வெற்றியை....!!
விஜய் படத்தின் பாடலுக்கு தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீசன் 16 ஐபிஎல் போட்டி வரும் 31 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ள நிலையில், அணிகள் ஒவ்வொன்றும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னையில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : தோ்வு எழுதாமல் தவறியவா்களுக்கு மறுதோ்வு நடத்தப்படும் - திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி!
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய்யின் பீஸ்ட பட பாடலுக்கு டோனி உள்ளிட்ட 4 வீரர்கள் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வரும் ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு, டோனி கித்தார் வாசிப்பது போன்றும், அருகில் ருதுராஜ், சிவன் துபே, தீபக் சாஹர் ஆகியோர் நடனமாடுவது போன்றும் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வென்றன.
இந்திய அணி 2 க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி 2 க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதையும் படிக்க : பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்...மாணவ மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டறிந்த அமைச்சர்!
இதற்கிடையே, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தோல்வி, புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியை காண வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிசுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வருகை தந்தார். அவருடன் மந்திரிகள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியை காண அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்துக்கு பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியும் வந்தனர். அப்போது இருவருக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : இந்தியாவில் உருவாகும் ஒரு ஜானி தெப்... உண்மையில் யார் இங்கு தவறு?
இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் தங்கள் நாட்டின் அணி கேப்டன்களுக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கினர். பின்னர் வாகனம் மூலம் மைதானத்தில் ஊர்வலமாக வந்த பிரதமர்கள், அங்கு குழுமியிருந்த கிரிக்கெட் ரசிகர்களை பார்த்து கை அசைத்தனர்.
மைதானத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமருக்கு எடுத்து கூறினார். இருநாட்டு கிரிக்கெட் வீரர்களையும் பிரதமர்கள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
மகளிர் டி20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் களம் இறங்கியது. விறுவிறுப்பான ஆட்டத்தொடரில், குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க : வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி, தங்களுடைய சிறப்பான ஆட்டத்தால் 19 புள்ளி 5 ஒவர்களில் 175 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தாயசத்தில் அபார வெற்றி பெற்றது.