அபார வெற்றிப் பெற்றது ஆஸ்திரேலிய அணி...

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அபார வெற்றிப் பெற்றது ஆஸ்திரேலிய அணி...

தற்போது டி-20 உலகக் கோப்பை நடைப்பெற்று வருகிறது. அதில், இன்று, இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடி அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்த நிலையில், ஆறு விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 157 ரன்களை எடுத்தது. இதனால், 158 ரன்களை இலக்காகக் கொண்ட ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து அபார வெற்றிப் பெற்றது.

மேலும் படிக்க | இந்திய vs பாகிஸ்தான்.. இந்திய அணி திகில் வெற்றி..!

இந்த போட்டியில், அதிகபட்சமாக 59 ரன்களை மார்கஸ் ஸ்டோய்னிஸ் பெற்றார். மேலும், ஆரோன் ஃபின்ச் 31 ரம்களும், க்ளென் மேக்ஸ்வெல் 23 ரன்களும், ஷான் மார்ஷ் 17 ரன்களும் பெற்றார்.

முதலில் மிகவும் மெதுவாக விளையாட துவங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து சூச்டு பிடிக்க ஆரம்பித்தது. அவர்களது திடீர் வெற்றி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | அடுத்தடுத்து காயங்களால் பாதிக்கப்படும் வீரர்கள்..இங்கிலாந்து, இலங்கையை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியிலும்..!