இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா உறுதி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா உறுதி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றது. நியூசிலாந்து உடனான இறுதி ஆட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனர். இந்திய, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி செப்டம்பர் மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு முன் இந்திய வீரர்கள், வரும் 20ம் தேதி உள்ளூர் அணிகளுடனான போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் குணமடைந்து விட்ட நிலையில், மற்றொரு வீரர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வருகிற 18ம் தேதி மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. எனினும் அவர் நலமுடன் உள்ளதாகவும் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.