தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா: இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

ஐதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா: இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஐதராபாத் - டெல்லி அணிகளுக்கு இடையேனா போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில்  வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் உள்ளிட்டோரை முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

 ஐதராபாத் அணியைச் சேர்ந்த அனைவரும் இன்று காலை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலயில் திட்டமிட்டப்படி துபாயில்  ஐதராபாத் - டெல்லி அணிகளுக்கு இடையேன ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.