ஊழியருக்கு கொரோனா தொற்று: இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுமா...

ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஊழியருக்கு கொரோனா தொற்று: இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுமா...

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளது. கடைசி டெஸ்டையும் வென்று 3-1 என்ற கணக்கில் வெல்லும் முனைப்புடன் விராட் கோலி படை காத்திருக்கும் சூழலில், ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு முன்னதாக கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. மேலும் வீரருக்கு யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படதால் திட்டமிட்டபடி 5வது டெஸ்ட் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளன.