ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா புதிய சாதனை

 ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா புதிய சாதனை

 ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 33 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மட்டும் ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை படைத்துள்ளார். வருண் சக்ரவர்த்தி வீசிய மூன்றாவது ஓவரில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.