வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டது - வம்புக்கு இழுக்கும் மைக்கேல் வாகன்

வானிலையால் இந்திய கிரிக்கெட் அணி காப்பாற்றப்பட்டதாக கூறி, இந்திய ரசிகர்களை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வம்புக்கு இழுத்துள்ளார்.

வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டது - வம்புக்கு இழுக்கும் மைக்கேல் வாகன்

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் பெய்து வரும் மழையால், இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போட்டிக்கான டாஸ் இன்னும் சுண்டப்படாத நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் உணவு இடைவேளை வரை போட்டி தடைபட்டது.

இந்நிலையில், வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.