பாக். லீக் போட்டியில் பங்கேற்போருக்கு பிசிசிஐ-யில் வாய்ப்பில்லை  

பாக். லீக் போட்டியில் பங்கேற்போருக்கு பிசிசிஐ-யில் வாய்ப்பில்லை   

காஷ்மீர் பிரிமீயர் லீக் ஆட்டத்தில் பங்கேற்கும் வீரர்கள், இந்திய சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் வருகிற 6ம் தேதி பிரிமீயர் லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த போட்டியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனை மீறும் பட்சத்தில், பிசிசிஐயுடனான தொடர்பு துண்டிக்கப்படும் எனவும், இந்திய போட்டிகளில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.மேலும் இது தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் கூறப்பட்டுள்ளது.