ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வெண்கலப்பதக்கம் வென்று சாதனை...

ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வெண்கலப்பதக்கம் வென்று சாதனை...

 துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, 140 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

இதன் மூலம் நியூசிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை ராஜா பெற்றுள்ளார். ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.