ஷ்ரேயாசின் இரண்டாவது சதம்... அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி....

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷ்ரேயாசின் இரண்டாவது சதம்... அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி....

ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக் 5 ரன்னிலும், மலான் 25 ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர், ஹென்ரிக் - மார்க்ரம் இணை, பொறுப்புடன் விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில், சிராஜ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

மேலும் படிக்க | 44 வயதை அடைந்த இமிடேஷன் பந்து கண்டுபிடிப்பாளர்...!!

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், ஷிகர் தவான் 13 ரன்களிலும், கில் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் நிலைத்து நின்று ஆடி, சதம் விளாசினார். இதேபோல், இஷான் கிஷன், 84 பந்துகளில் 93 

ரன்களை குவித்தார். இதன்மூலம், 45 புள்ளி 5 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. 

மேலும் படிக்க | டி20-யில் இரட்டை சதம்.. கிறிஸ் கெயிலை ஓரங்கட்டிய கான்வெல்.. இருந்தாலும் வரலாற்றில் இடமில்லை..!

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-க்கு 1 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்தது.