சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து மயங்கிவிழுந்த வீராங்கனைகள்.! திடீர் பரபரப்பு.!  

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து மயங்கிவிழுந்த வீராங்கனைகள்.! திடீர் பரபரப்பு.!  

ஆன்டிகுவாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த 2 வீராங்கனைகள் மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர்  நடந்து வருகிறது. இந்த தொடரின் 2-வது ஆட்டம், ஆன்டிகுவாவில் நடைபெற்றது. அப்போது பீல்டிங் செய்யும்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை சினெல் ஹென்றி திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். 

உடனடியாக விரைந்த அணி மருத்துவர்கள், அவருக்கு முதலுதவி அளித்து ஸ்டிரெச்சர் மூலம் மைதானத்தை விட்டு வெளியில் தூக்கி சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த அணியின் மற்றொரு வீராங்கனை செடின் நேஷன், மயக்கம் அடைந்து மைதானத்தில் சரிந்தார். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த இரு வீராங்கனைகளும் தற்போது சுய நினைவுடன் நன்றாக உள்ளனர்.