ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜூலை 14ஆம் தேதி டோக்கியோ செல்கிறது இந்திய அணி...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி ஜூலை 14ஆம் தேதி விமானம் மூலம் டோக்கியோ செல்வதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜூலை 14ஆம் தேதி டோக்கியோ செல்கிறது இந்திய அணி...

ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ள 115 இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி, ஜூலை 14ஆம் தேதி விமானம் மூலம் டோக்கியோ செல்வதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

யூ திங்க் அறக்கட்டளை மற்றும் சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளி இணைந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழாவினை நடத்தினர். விழாவில் கலந்து கொண்டு பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 10க்கும் மேற்பட்ட ஒலிம்பிக் மெடல்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.