ஜப்பானில் தங்கி வேலை செய்ய விருப்பம்: கடிதம் எழுதிவிட்டு மாயமான ஒலிம்பிக் வீரர்...

ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக கூறி கடிதம் எழுதிவைத்து விட்டு உகாண்டா நாட்டு ஒலிம்பிக் வீரர் காணாமல்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் தங்கி வேலை செய்ய விருப்பம்: கடிதம் எழுதிவிட்டு மாயமான ஒலிம்பிக் வீரர்...

20 வயதான உகாண்டா பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ளார். மேற்கு ஜப்பானின் ஒசாகாவில் உள்ள இசுமிசானோ என்ற நகரத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை நேற்று  நள்ளிரவு முதல் காணவில்லை. கொரோனா பரிசோதனைக்காக வீரர்கள் அழைக்கப்பட்ட போது அவர் காணாமல் போனது தெரியவந்தது.

 உகாண்டாவில் வாழ்வது கடினமாக இருப்பதால், ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக ஒரு கடிதம் அவர் எழுதி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அருகிலுள்ள ரெயில் நிலையம் அவர் மத்திய ஜப்பானில் உள்ள நகோயாவுக்கு புல்லட் ரெயிலில் ஏற  டிக்கெட் வாங்கியதை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செகிடோலெக்கோ தகுதி பெறவில்லை, அடுத்த செவ்வாயன்று உகாண்டாவுக்கு திரும்ப வேண்டிய நிலையில் இருந்தார்.