உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்... வரலாறு படைத்த இந்திய வீரர்...

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்... வரலாறு படைத்த இந்திய வீரர்...

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் வரலாறு படைத்துள்ளார். 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக நாட்டவரான 19-ம் நிலை வீரர் லக்‌ஷயா சென்னுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 17 க்கு 21, 21 க்கு 14, 21 க்கு 17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்திய ஸ்ரீகாந்த், முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.