கோபா அமெரிக்கா தொடர்; அரையிறுதிக்கு முன்னேறிய பிரேசில்..! 

கோபா அமெரிக்கா தொடர்; அரையிறுதிக்கு முன்னேறிய பிரேசில்..! 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், பிரேசில் மற்றும் பெரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி, பிரேசிலில் நடைபெற்று வருகிறது. முதல் காலிறுதி ஆட்டத்தில் பெரு மற்றும் பராகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போதும், இதே நிலை நீடித்ததால், முடிவை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4 க்கு 3 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்து, பெரு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் மற்றும் சிலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பிரேசில் அணி 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் 6-ந் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில், பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.