இங்கிலாந்து செல்லும் முன் 3 முறை இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை…

இங்கிலாந்து செல்லும் முன் 3 முறை இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை…

மும்பை செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, மே 19-ம் தேதிக்கு முன் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாட உள்ளது. ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்து புறப்படும் இந்திய வீரர்கள், அதற்கு முன்னதாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதற்காக அனைவரும் மே 19-ம் தேதி மும்பை செல்ல உள்ளனர். அதற்கு முன்னதாக அவரவர் வீடுகளில் வைத்து, இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.