இந்திய அணி வீராங்கனை மித்தாலி ராஜ் புதிய சாதனை.! 

இந்திய அணி வீராங்கனை மித்தாலி ராஜ் புதிய சாதனை.! 

பெண்களுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் படைத்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று வொர்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த போட்டியில் 12 ரன்களை எடுத்த போது மித்தாலி ராஜ் 10 ஆயிரத்து 273 ரன்களை கடந்து இங்கிலாந்து கேப்டன் சார்லட் எட்வார்டை பின்னுக்கு  தள்ளி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற  புதிய சாதனையை நிகழ்த்தினார். இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.