காரைக்காலில் துப்பாக்கி சுடும் போட்டி!

காரைக்காலில் துப்பாக்கி சுடும் போட்டி!

காரைக்காலில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகாரைக்கால் மாவட்ட துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் விஆர்எஸ் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் இன்று நடைபெற்றது. இப்போோட்டியினை திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் சிவா தொடங்கி வைத்தார். 10 மீட்டர் தூரத்தை குறி பார்த்து சுட வேண்டும் என்பது இலக்கு. 

இதில் ஒன்பது வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனித்தனியாக பங்கேற்றனர். இதில் அதிக புள்ளிகளை பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகரப் போக்குவரத்து ஆய்வாளர் மரிகிருஷ்டின்பால் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார்.  

இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியினை காரைக்கால் மாவட்ட துப்பாக்கி சுடும் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ஆர்.எஸ்.குமார் ஒருங்கிணைத்தார். இதில் ஏராளமான சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.