இந்திய அளவிலான போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி!

பீச் வாலிபால் போட்டியின் இறுதிப்போட்டிக்கு குஜராத் மாநில அணியும் புதுச்சேரி அணியும் தகுதி பெற்றன.

இந்திய அளவிலான போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி!

குஜராத் மாநிலம் சூரத்தில் 36 வது இந்திய அளவிலான பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. 

பீச் வாலிபால் போட்டி

இதில் 12 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்குபெற்ற பீச் வாலிபால் போட்டியின் இறுதிப்போட்டிக்கு குஜராத் மாநில அணியும் புதுச்சேரி அணியும் தகுதி பெற்றன. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத், புதுச்சேரி அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் புதுச்சேரி அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. புதுச்சேரி அணி முதன் முறையாக இந்திய அளவிலான போட்டியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மக்கள் வரவேற்பு

இந்த நிலையில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் சசிகலா, கனிமொழி மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் கலையரசன் மூவரும் இன்று அவர்களது சொந்த ஊரான புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு வந்தனர். அவர்களை விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அவர்களை பேருந்து நிலையத்திலிருந்து உற்சாகமாக வரவேற்று ஊர்வலமாக வந்தனர்.

அப்போது சாலைகளில் அவர்களுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவர்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.