விம்பிள்டன் தொடர்.. மூன்றாம் சுற்றுக்கு முன்னேறிய ரோஜர் ஃபெடரர்..! 

விம்பிள்டன் தொடர்.. மூன்றாம் சுற்றுக்கு முன்னேறிய ரோஜர் ஃபெடரர்..! 

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், 3-வது சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேறியுள்ளார். 

டென்னிசின் அதிஉயர் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் க்ராண்ட்ஸ்லாம் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. புல்தரையில் நடக்கும் இந்த போட்டியில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அதிக முறை வென்றுள்ளார். ஆகவே அவர் இந்த முறையும் வெல்வாரா என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் 7 / 6, 6 / 1, 6 / 4 என்ற நேர் செட் கணக்கில், பிரான்ஸ் வீரர் காஸ்குட்டை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.