இல்லை, இது இலங்கை அணியே இல்லை,.! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!

இல்லை, இது இலங்கை அணியே இல்லை,.! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!

கொரோனா சூழலால் உலகமெங்கும் பல விளையாட்டு தொடர்கள் முடங்கியுள்ளன. ஆனாலும் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நாடுகளில் விளையாட்டு தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வங்காளதேசத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அங்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரஹிம் 84 ரன்கள் குவித்தார்.

அதன்பின் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் எப்படி இருந்த அணி இப்போது இப்படி ஆகி விட்டதே என ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகிறார்கள்.