நான் மிகவும் கவலைப்படுகிறேன்…. ட்விட்டரில் கெஞ்சும் பிராவோ

நான் மிகவும் கவலைப்படுகிறேன்…. ட்விட்டரில் கெஞ்சும் பிராவோ

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்று கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டுவைன் பிராவோ, தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினைTag செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீண்டு வர மாநில அரசுகள் விதிக்கப்பட்டுள்ள விதிகளை கண்டிப்பாக பின்பற்ற உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அவரதேவைக்கு சென்றால் முககவசம் அணியுங்கள். குறிப்பாக, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இவைதான் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். நம்மால் நமது குடும்பத்தினர்கள் பாதிக்கக்கூடாது. நீங்கள் அனைவரும் சாம்பியன்கள். விரைவில் கொரோனாவிலிருந்து மீள்வீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.