பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய்: 2.15 கோடி பாட்டில் நெய் தயார் செய்யும் பணி தீவிரம்...

வரவுள்ள பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றதை ஆவின் நிர்வாகம் வரவேற்றுள்ளது.

பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய்: 2.15 கோடி பாட்டில் நெய் தயார் செய்யும் பணி தீவிரம்...

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மில்லி லிட்டர் அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆவின் நிறுவனத்திற்கு 135 கோடி வருமானம் கிடைக்க உள்ளதாகவும், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.