பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்!

பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்!

2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம் பெட்ரோல் பங்குகளில் சில்லறை தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருக்க வங்கிகள் தடையின்றி 2000 ரூபாய் நோட்டிற்கான தகுந்த சில்லறைகளை வழங்கி உதவிட வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை முதல் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் தாள்களை பெட்ரோல் பங்குகளில் பெருவாரியாக மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதால் வங்கிகள் உரிய சில்லறைகளை தடையின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:கட்சி பொறுப்பிலிருந்து விலகிய பாஜகவின் ஒரே ஒரு கவுன்சிலர். காரணம் என்ன?