அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு ...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோடி கணக்கில் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு ...

கடந்த அதிமுக ஆட்சியின் போது, பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலையும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 4 பேர் மீது  புகார் அளிக்கப்பட்டது.  

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேருக்கு முன் ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்ய போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இதனால்  ராஜேநதிர பாலாஜி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.