தமிழ் தந்தை சி.பா.ஆதித்தனார் 41வது நினைவு தினம்.. மாலைமுரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் மரியாதை

தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவான் சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலைமுரசு குழும நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தனார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் தந்தை சி.பா.ஆதித்தனார்  41வது நினைவு தினம்.. மாலைமுரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் மரியாதை

மாலைமுரசு மற்றும் தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களை தொடங்கிய சி.பா ஆதித்தனார் அரசியல் களத்திலும் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கினார்.

தம் வாழ்நாள் முழுவதுமே தமிழுக்கும் வாழ்ந்து கழித்த தியாகச் செம்மல் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், 1981-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதியன்று தனது 75-வது வயதில் இன்னுயிரைத் துறந்தார்.

இந்நிலையில் அவரின் மறைவை நினைவு கூறும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலைமுரசு குழும நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தனார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.