5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம்...  தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் மேலும் 5   ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த சிவதாஸ் மீனா  தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த தீரஜ் குமார் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளராக இருந்த கார்த்திகேயன்  உயர் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமனம். போக்குவரத்து துறையின் ஆணையராக இருந்த ஜவகர் கால்நடை பால் மற்றும் மீன்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஹர்மேந்திர சிங், சர்க்கரைத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.