5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உட்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பணியை தொடர்வார் என கூறப்பட்டுள்ளது. ஏடிஜிபிக்கள் ஏ.கே.எஸ்.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், டி.வி.ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு பெற்ற ஏ.கே.விஸ்வநாதன் காவல்துறை வீட்டு வசதி கழக டிஜிபியாக பணியை தொடர்வார் என்றும்.,ஆபாஷ் குமார் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவில் டிஜிபியாக தொடர்வார் என்றும் அரசு  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பதவி உயர்வு பெற்ற சீமா அமர்வால் காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் பணியை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஜிபிக்கள் சங்கர், வெங்கட்ராமன், அமரேஷ் புஜாரி, வினித் தேவ் வன்கடே, மகேஷ்குமார் அகர்வால் ஆகியோருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.