அதிமுக ஆட்சியில் 50 கோடி ரூபாய் முறைகேடு...  அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

அதிமுக ஆட்சியில் 50 கோடி ரூபாய் முறைகேடு...  அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே சிறந்த உதாரணம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.  அப்போது மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.  மேலும் சிஏஜி அறிக்கையின் படி அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் இருந்து 3 சதவீத மாணவர்கள் வெளியேறியதாக தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் வருகை தந்துள்ளதாகவும் பெருமிதமுடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே சிறந்த உதாரணம் என்று கூறினார்.  மேலும்  அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 50 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க:   நாடாளுமன்ற தோ்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியா?!