யாரு பா நீங்கலாம்.. 50 லட்சம் ரூபாய் வெளிநாட்டு கரன்சிகள்.. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!!

யாரு பா நீங்கலாம்.. 50 லட்சம் ரூபாய் வெளிநாட்டு கரன்சிகள்.. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!!

சென்னையில் இருந்து துபாய், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற 50 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, அங்கு வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேரிடமிருந்து 50 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.