தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...நேற்றைய பாதிப்பு மட்டும் இவ்வளவா?

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...நேற்றைய பாதிப்பு மட்டும் இவ்வளவா?

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் குறைந்து காணப்பட்ட கொரோனா தொற்று, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரே நாளில் 502 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு...!

சென்னையில் அதிகபட்சமாக 136 பேரும், கன்னியாகுமரியில் 52 பேரும், கோவையில் 42 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 28 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 329 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 48 ஆக உள்ளதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.